உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 30, 2010

கடலூர் மாவட்ட டெல்டா பகுதிகளில் 1.54 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி திட்டம்: இணை இயக்குநர் தகவல்

கடலூர்:

             கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் இந்த ஆண்டு 1.54 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யத் திட்டமிட்டு இருப்பதாக வேளாண் இணை இயக்குநர் ச.இளங்கோவன் தெரிவித்தார். இந்தப் பரப்பளவு இயல்பைவிடக் கூடுதல் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

                நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையில் நீர்மட்டம் 84 அடியாக இருந்த போதிலும், சாகுபடிப் பணிகள் காலதாமதம் ஏற்படுவதைத் தடுக்க, ஜூலை 28-ல் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து ஆகஸ்ட் 1-ம் தேதியும், கீழணையில் இருந்து ஆகஸ்ட் 11-ம் தேதியும் தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகள் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டும், ஆழ்குழாய்க் கிணறுகள் உள்ள இடங்களிலும் சம்பா நெல் நாற்று விடும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். செம்மை நெல் சாகுபடியில் நாற்றின் வயதைக் குறைக்கலாம். 

               இதனால் தாமதமாகத் தண்ணீர் கிடைத்தாலும், செப்டம்பர் இறுதிக்குள் நடவுப் பணிகளை முடித்து விடலாம்.÷சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் தற்போது பெய்துள்ள மழையைப் பயன்படுத்தியும், ஆழ்குழாய்க் கிணறுகள் மூலமாகவும் நேரடி விதைப்பு மற்றும் நாற்றங்கால் பணிகளை மேற்கொண்டால் செப்டம்பர் இறுதிக்குள் நடவை முடித்து, நவம்பர் மாத மழையில் இருந்து நெல் பயிர்களைக் காப்பாற்றிவிட முடியும். ஜனவரி மாதத்தில் அறுவடைக்கு ஏதுவாகும். அதைத் தொடர்ந்து நிச்சயம் நஞ்சைத் தரிசில் பயறு வகைகளைச் சாகுபடி செய்யலாம்.

                வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 20-ல் ஆரம்பமாகும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியிருக்கிறார். கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளில் 600 ஏக்கரில் நாற்றங்கால் விடப்பட்டு உள்ளது. ÷விவசாயிகள் வீராணம் ஏரி நீர் திறப்பை எதிர்நோக்கி உள்ளனர். ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தித் திட்டத்தில் கிலோவுக்கு |5 மானிய விலையிலும், விதை கிராமத் திட்டத்தில் 50 சதம் மானிய விலையிலும், விதை நெல் வழங்கப்படுகிறது. இதுவரை 122 டன் விதை நெல் வேளாண் துறை மூலமாகவும், 62 டன் தொடக்கக் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் விநியோகிக்கப்பட்டு உள்ளது.

                  வெள்ளைப் பொன்னி, ஏடிடி 39, ஏடிடி 38, ஆந்திரா பொன்னி, கோ-43, கே.ஆர்.எச்-2 வீரிய ஒட்டு ரக விதை நெல் 282 டன் வேளாண் விரிவாக்க மையங்களிலும் 120 டன் தொடக்கக் கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பு உள்ளது. டெல்டா சாகுபடிக்குத் தேவையான ரசாயன உரங்கள் தயார் நிலையில் தனியார் உரக் கடைகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. நுண்ணுயிர் பொட்டலங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் இருப்பு உள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் அலுவலர்களை அணுகி செம்மை நெல் சாகுபடி தொழில் நுட்பங்களையும் மானிய திட்டங்களையும் கேட்டறிந்து பயன்பெறலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior