உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 30, 2010

விருத்தாசலத்தில் மோசமானது மாற்று வழிச்சாலை தொடர் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் அச்சம்

விருத்தாசலம் : 

              விருத்தாசலம் எறுமனூர் மாற்று வழிப்பாதை சாலையில் உள்ள மோசமான பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வாகனங்கள் கவிழ்வதை தவிர்க்க நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர், திருச்சி செல்லும் வாகனங்கள் பாலக்கரை, கடைவீதி, மணலூர் வழியாகச் சென்று வந்தது. தற்போது மணலூரில் உள்ள ரயில்வே கேட்டில் மேம் பால பணி நடந்து வருகிறது.

                      இதனால் இந்த வழியாக வந்த வாகனங்கள் எறுமனூர் பாலம் வழியாக ரயில்வே ஜங்ஷனை கடந்து பஸ் நிலையம் அடையுமாறு மாற்றுப் பாதையில் மாற்றி விடப் பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் எப்போதும் இல்லாத வகையில் தற்போது அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன. இச்சாலை அமைந்துள்ள பகுதி களிமண் பகுதி என்பதாலும், அதிக அளவிலான கனரக வாகனங்கள் செல்வதாலும் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது.  மேலும் வளைவுகள் அதிகமாக இருப்பதால் வேகமாக வரும் வாகனங்கள் நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுகிறது. 

                       கடந்த சில மாதங்களுக்கு முன் இச்சாலையில்  சென்ற தனியார் பஸ் நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் பஸ் டிரைவர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார். 50க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து சிமென்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி உட்பட மூன்று லாரிகள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கி கவிழ்ந்தது. விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior