உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 25, 2010

கடலூர் மத்திய சிறையில் கைதிகள் மோதல்

கடலூர் :  

               கடலூர் மத்திய சிறையில் கைதிகளுக் குள் ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

               புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (24). கடலூர் அடுத்த மேல் பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் பாரூக் (27). இருவரும் வெவ்வேறு திருட்டு வழக்கில் கைதாகி கடலூர் மத் திய சிறையில காவலில் உள்ளனர். நேற்று முன்தினம் சிறையில் உள்ள விசாரணைக் கைதிகளை அவரவர் வார்டுகளை சுத்தம் செய்யுமாறு சிறைக் காவலர்கள் கூறினர்.

                     வார்டை சுத்தம் செய்த போது சதீஷ் மற்றும் பாரூக் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சதீஷ் அறையில் இருந்த மாத்திரை பிளாஸ்டிக் அட்டையைக் கொண்டு பாரூக்கை தாக்கினர். அதில் அவர் படுகாயமடைந்தார். சிறைக் காவலர்கள் விரைந்து வந்து பாரூக்கை சிறை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து சிறை அலுவலர் வேணுகோபால் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior