உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, செப்டம்பர் 25, 2010

கடலூர் மாவட்டத்தில் 2.75 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி

கடலூர்:

               கடலூர் மாவட்டத்தில் 2.75 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டு உள்ளது.

                மழைக் காலங்களில் கால்நடைகளை பெரிதும், தாக்கும் தன்மை கொண்டது கோமாரி நோய். இந்நோயால் பசுக்கள் பாதிக்கப்பட்டால், கால்கள் மற்றும் வாயில் புண் காணப்படும். இதனால் பசுக்கள் உணவு உண்ணாது. பால் கறக்கும் அளவு குறைந்து விடும். சினை பிடிக்காது. சினை பிடித்தாலும் கன்றுகள் இறந்து பிறக்க நேரிடும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்டத்தில் கோமாரி நோய் பெருமளவுக்குக் காணப்பட்டது.÷அதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் மழைக்காலம் தொடங்குமுன், கடலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்குக் கோமாரி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது. 

                       இதனால் கடலூர் மாவட்டத்தில் கோமாரி நோய் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக கால்நடை பராமரிப்புத்துறை அறிவித்து உள்ளது.÷கால்நடை மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் இளங்கோவன் மேற்பார்வையில் கடலூர் மாவட்டத்தில் 26-8-2010 முதல் கோமாரி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 2.75 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டதாக கால்நடை மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior