உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 12, 2010

கடலூரில் தொடரும் போக்குவரத்து நெரிசல் : புறநகர் பஸ் நிலையம் உருவாக்கப்படுமா?

கடலூர் : 

                  கடலூர் நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை குறைத்திட நகரின் மையப் பகுதியில் உள்ள பஸ் நிலையத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மாவட்ட தலைநகரான கடலூரில் தலையாய பிரச்னையாக உள்ளது போக்குவரத்து நெரிசல். 

               நகரின் மையப் பகுதியான லாரன்ஸ் ரோட்டில் பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன், வணிக நிறுவனங்கள் உள்ளதால் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பஸ் நிலையம் விரிவுப்படுத்தப்பட்டு பஸ் நிலையம் பின்புறம் வழியாக திருப்பி விடப்பட்டது. இருந்த போதிலும் லாரன்ஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாக உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு தினசரி 4,500 (டிரிப்கள்) பஸ்கள் வந்து செல்கின்றன. 

                 ஆனால் அதற்கேற்ப பஸ் நிலையத்தில் இட வசதி இல்லை. இருக்கின்ற இடத்தை வியாபாரிகள் ஆக்கிரமித்துக் கொண் டுள்ளதால் பயணிகள் நிற்கக் கூட இடமில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை பயன்படுத்திக் கொண்டு திருடர்களும் பயணிகளிடம் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகின்றனர். குறுகிய இடத்தில் பஸ் நிலையம் இயங்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பஸ்கள் உள்ளே வரவும் தாமதமாவதால் லாரன்ஸ் ரோட்டிலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. 

                  இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு கடலூர் பஸ் நிலையத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். அதில் தற்போதைய பஸ் நிலையத்தை டவுன் பஸ் நிலையமாகவும், புற நகர் பஸ்களுக்கு நகரின் வெளிப் பகுதியில் புதிதாக பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதனைத் தொடர்ந்து புறநகர் பஸ் நிலையம் அமைக்க கடலூர் செம்மண்டலத்தில் இயங்கி வரும் கரும்பு ஆராய்ச்சி நிலைய இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்குள்ள கரும்பு ஆராய்ச்சி நிலையத்தை வெள்ளப்பாக்கத்திற்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டன. 

                    அண்டை மாவட்டமான விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களில் 2 பஸ் நிலையம் அமைக்கப்பட்டு போக்குவரத்து பரவலாக்கப்பட் டுள்ளது. ஆனால் கடலூரில்  இந்த திட்டம் என்ன காரணத்தினாலோ பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior