உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 12, 2010

கடலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் தொகை விவரப் பதிவேடு வெளியீடு

கடலூர் : 

                   தேசிய மக்கள் தொகை விவர பதிவேடு நேற்று வெளியிடப்பட்டது. கடலோர கிராமங்களில் வழக்கமாக வசிக்கும் நபர்களைக் கொண்ட தேசிய மக்கள் தொகை பதிவேட்டை உருவாக்குவதற்காக நேரடியாக புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் பணி கடலூர் மாவட்டத்தில் 15 கிராமங்களில் முடிவடைந்துள்ளது. 

                    கடலூர் வட்டத்தில் சிங்கிரிகுடி, குண்டு உப்பலவாடி, சுபாஉப்பலவாடி, குடிகாடு, பச்சையாங்குப்பம், தியாகவல்லி, திருச்சோபுரம், காயல் பட்டு, ஆண்டார் முள்ளிப் பள்ளம் மற்றும் சிதம்பரம் வட்டத்தில் பெரியப் பட்டு, சிலம்பிமங்கலம், கொத்தட்டை, வில்லியநல்லூர், அரியகோஷ்டி, தாண்டவராய சோழகன்பேட்டை ஆகிய கடலோர கிராமங்களில் புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணி நிறைவடைந் துள்ளது.
 
                 இவ்வாறு சேகரிக்கப்பட்ட விவரங்களின் விரைவுப் பதிவேடு தாசில் தார்களால் நேற்று அந்தந்த கிராமங்களில் பொது இடங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அப் பதிவேட்டில் உள்ள தகவல்களில் திருத்தங்கள், மாற்றங்கள், இறந்த நபரின் பெயரை நீக்குதல், ஆட்சேபணை மற்றும் புதியதாக பெயர் சேர்த்தல் போன்ற கோரிக்கைகளை 30ம் தேதிக்குள் உள்ளூர் பதிவாளர், கிராம நிர்வாக அலுவலர்களிடம் உள்ள உரிய படிவங்களை பெற்று விண்ணப்பித்துக் கொள்ள கலெக்டர் சீத்தாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior