உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 20, 2010

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

            தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

                மாவட்ட துணை ஆட்சியர், ஊரக வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர், துணை காவல் கண்காணிப்பாளர், கூட்டுறவு சங்கத்தின் துணை பதிவாளர் உள்ளிட்ட மொத்த 61 காலிப் பணியிடங்களுக்கு, கடந்த மே 2-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர்.

                  5 மாதங்கள் ஆகியும் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில், குரூப்-1 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டன.  முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 2011 ஜனவரி 22, 23 ஆகிய தேதிகளில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior