உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 10, 2010

பண்ருட்டி அருகே மின்னல் தாக்கி 3 சிறுவர்கள் பலி




பண்ருட்டி : 

               பண்ருட்டி அருகே மின்னல் தாக்கியதில் பள்ளி மாணவர் உட்பட மூன்று பேர் இறந்தனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த வீரபெருமாநல்லூர் சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் வீரமணி (15). இவர் அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். 

                    இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் சதீஷ் (14), கண்ணன் மகன் மெக்கானிக் முத்துராஜ் (15) ஆகியோர், வீரபெருமாநல்லூர் ஏரியில் நேற்று காலை 11 மணியளவில் குளிக்கச் சென்றனர். மூவரும் குளித்து விட்டு மதியம் 2 மணிக்கு வீடு திரும்பும் போது, மழை பெய்தது. உடன், ஓடிச் சென்று ஏரியின் அருகில் உள்ள மரத்தின் கீழ் நின்றனர். அப்போது பலத்த மின்னல் தாக்கியது. அதில் வீரமணி, சதீஷ், முத்துராஜ் ஆகிய மூவரும் அதே இடத்தில் உடல் கருகி இறந்தனர். 

                      தகவலறிந்த பண்ருட்டி டி.எஸ்.பி., பிரசன்னகுமார், தாசில்தார் பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். புதுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரே ஊரில் மூன்று சிறுவர்கள் இறந்த சம்பவம் வீரபெருமாநல்லூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior