உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 10, 2010

கடலூரில் வாழைத்தார் விலை வீழ்ச்சி : ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை இழப்பு

கடலூர்:

                     கடலூர் பகுதியில் சூறைக் காற்றில் வாழை மரங்கள் சாய்ந்ததால் ஏக்கருக்கு 30 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். 

                    கடலூர் கேப்பர் மலை அடுத்த வழிசோதனைப்பாளையம், கண்ணாரப்பேட்டை, கிழக்கு ராமாபுரம், மேற்கு ராமாபுரம், எம்.புதூர், எஸ்.புதூர், ஒதியடிக்குப்பம், கொடுக் கன்பாளையம், காட்டுப்பாளையம், கீரப்பாளையம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாதத் தில் மணிலாவுடன் சேர்த்து  ஒரு போக வாழையும், ஜூலை மாதத்தில் ஒரு போகமாகவும் 10 முதல் 12 மாத பயிரான வாழை இரு போகமாக பயிர் செய்யப்படுகிறது. கடந்த நவம்பரில் பயிர் செய்யப்பட்ட வாழை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஜூலையில் பயிர் செய் யப்பட்ட வாழை 6 அடி உயரத்திற்கு மேல் வளர்ந்துள்ளது.

                        இந்நிலையில் வங்கக் கடலில் உருவான "ஜல்' புயல் காரணமாக கடந்த 7ம் தேதி கடலூர் மாவட்டம் முழுவதும் பலத்த சூறைக் காற்று வீசியது. இதில் அறுவடை பருவத்தில் உள்ள ஏராளமான வாழை மரங்கள் சாய்ந் தன. மேலும் ஜூலையில் பயிர் செய்யப்பட்ட வாழைகளும் அதிகளவில் சாயந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏக்கருக்கு 200 முதல் 300 வாழை மரங்கள் வரை சாய்ந்துள்ளன. 

                  அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் வாழை மரங்கள் சாய்ந்ததால் வாழைத் தாரை குறைவான விலைக்கே வியாபாரிகள் கொள்முதல் செய்யமுன் வந்துள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் உழவர் சந்தையில் நேற்று வாழைத்தார் வெறும் 25 முதல் 50 ரூபாய் வரையே விற்பனை செய்யப்பட்டது.

வாழைத்தாரின் விலை குறைவு குறித்து விவசாயிகள் கூறுகையில், 

                    "ஏக்கருக்கு 1,000 முதல் 1,100 வரை வாழைக் கன்றுகள் நடவு செய்யப்படும். ஆள் கூலி, கழி, உரம், களை எடுத்தல் உட்பட ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. தற்போது ஓரளவிற்கு அறுவடை முடிந்துள்ள நிலையில் சூறைக் காற்று வீசியதால் ஏக்கருக்கு 200 முதல் 300 வாழை மரங்கள் சாய்துள்ளன.

                   அறுவடைக்குத் தயாரான வாழைகள் சாய்ந்ததால் முற்றிய, முற்றாததார் என அனைத்து தார்களையும் அறுவடை செய்து விற் பனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முற்றாத வாழைத்தாரை வியாபாரிகள் வெறும் 25 முதல் 50 ரூபாய்க்கு கொள் முதல் செய்கின்றனர். தீபாவளிக்கு முன்பு தார் 80 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட் டது. தார் ஒன்றுக்கு 70 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. இதனால் ஒரு ஏக்கருக்கு 30 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை வாழை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட் டுள்ளது' என தெரிவித்தனர்.

ரோஜா செடிகளும் சேதம் : 

                      ராமாபுரம், எஸ்.புதூர் உட்பட பல கிராமங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள ரோஸ், காக்கட் டான், கனகாம்பரம் உள்ளிட்ட பூச்செடிகளும் சாய்ந்து பூக்களின் உற்பத்தியும் வெகுவாக குறைந்து விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மா, பலா, முந்திரி, தேக்க மரங்களும் காற்றில் முறிந்து விழுந்துள்ளன. நூற்றுக்கணக்கான ஏக்கர் கரும்பு பயிர்களும் காற்றில் சாய்துள்ளதால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior