உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 10, 2010

மதிப்பூட்டப்பட்ட உணவுகள் தயாரித்தல் பயிற்சிமுன் பதிவு செய்ய வேளாண் அதிகாரி வேண்டுகோள்

விருத்தாசலம்:

                   விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ள மீன் வகைகளில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுகள் தயாரித்தல் பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர் கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் சுப்ரமணியன் விடுத்துள்ள செய் திக்குறிப்பு:
 
               விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சி.ஐ.எப்.டி., கொச்சின் உதவியுடன் மீன் வகைகளில் இருந்து மதிப் பூட்டப்பட்ட உணவு தயாரித்தல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. வரும் டிசம்பர் 8, 9 தேதிகளில் நடைபெற உள்ள இப்பயிற்சியில் பண்ணை மகளிர், மகளிர் சுய உதவி குழுக்கள், கிராமப்புற இளைஞர்கள், வேலையில்லா பட்டதாரிகள், பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்கள், தொழில் முனைவோர் பயிற்சி பெறலாம்.

               காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு, தேனீர் மற்றும் பயிற்சி கையேடு இலவசமாக வழங்கப்படும்.பயிற்சிக்கு முதலில் வரும் 30 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவதால் பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர் கள் முன்கூட்டியே தங்களது பெயரினை வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். 

இணைபேராசிரியர் மற்றும் தலைவர், 
வேளாண்மை அறிவியல் நிலையம், 
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், 
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் 

                        என்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவோ அல்லது 04143- 238353 என்ற எண்ணிற்கு தொலைபேசி மூலமாகவோ தங்கள் பெயரை பதிவு செய்யலாம். நேரில் வந்தும் பதிவு செய்யலாம் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior