உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 10, 2010

வீராணம் தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு

காட்டுமன்னார்கோவில் : 

                    வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பருவமழை துவங்கியும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் போதுமான மழை பெய்யவில்லை. இதனால், விவசாயத்திற்கு வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் பெறப்பட்டது.

                     இந்நிலையில், "ஜல்' புயலால் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்தது. அதனால், பாசனத்திற்கு வீராணம் தண்ணீர் தேவையில்லை என்பதால் கடந்த 5ம் தேதி வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டது. வீராணத்திற்கு வந்த தண்ணீர், ஏரியில் தேக்காமல் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு 671 மில்லியன் கன அடி இருப்பு வைக்கப்பட்டது. இந்நிலையில் புயல் முடிந்து கடந்த இரண்டு நாட்களாக வெயில் காய்ந்து வருகிறது. 

                       இதனால் பாசனத்திற்கு தண்ணீர் தேவைப்பட்ட நிலையில் நேற்று கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வடவாற்றின் வழியாக 1,500 கன அடி தண்ணீர் பெறப்பட்டது. வீராணம் ஏரியில் இருந்து 50 கன அடி பெரிய மதகு வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போதைய நிலையில், 726 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ள நிலையில் சேத்தியாத்தோப்பு புதிய மதகு மூலம் 242 கன அடியும், சென்னைக்கு 74 கன அடியும், பாசனத்திற்கு 50 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior