உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 10, 2010

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் சீனியாரிட்டி பட்டியல் வெளியீடு

நெய்வேலி:

                     என்.எல்.சி.யில் பணியாற்றும் 9 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களின் சீனியாரிட்டி பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.  

                     என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 19 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  39 நாள்கள் நீடித்த போராட்டம் அக்டோபர் 27-ம் தமிழக முதல்வர் தலையீட்டின் பேரில் நிர்வாகத்துக்கும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து அக்டோபர் 28-ம் தேதி முதல் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்.  

                    இதைத் தொடர்ந்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை என்.எல்.சி.யில் பணிபுரியும் 9 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணிமூப்புப் பட்டியலை தொழிலக வாரியாக வெளியிட்டுள்ளது. இதைக்கண்ட தொழிலாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். இருப்பினும் பணிமூப்புப் பட்டியலுடன் சில நிபந்தனைகளுடன்கூடிய அறிவிப்பையும் நிர்வாகம் வெளியிட்டுள்ளதால் தொழிலாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior