உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 15, 2010

கடலூரில் இருந்து சென்னை ஆஸ்பத்திரிக்கு பிரேமானந்தா மாற்றம்


கடலூரில் இருந்து  சென்னை ஆஸ்பத்திரிக்கு
 
 பிரேமானந்தா மாற்றம்

கடலூர்:

                 பிரேமானந்தா சாமியார் இரட்டை ஆயுள் தண்டனை கைதியாக கடலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டதால் உடல் நலம் குன்றியது. எனவே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற தனக்கு 3 மாதம் பரோலில் அனுமதி வேண்டும் என்று கோர்ட்டில் அனுமதி கேட்டார்.

                கோர்ட்டு உத்தரவுபடி அவர் 3 மாதம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின்னர் பரோல் முடிந்ததும் கடந்த 10-ந் தேதி கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதனிடையே கடந்த 11-ந் தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. நிலைமை மோசமானதால் உடனடியாக பிரேமானந்தா சாமியார் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

                   நேற்று  காலை அவரது நிலைமை மேலும் மோசமானது. இதை அடுத்து பிரேமானந்தா சாமியார் சென்னை ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior