உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 25, 2010

கடலூர் மாவட்டத்தில் 350 பள்ளி வாகனங்கள் ஆய்வு: ஆட்சியர் தகவல்

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் 350 வாகனங்கள் வியாழக்கிழமை ஒரே நாளில், ஆய்வு செய்யப் பட்டதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். 

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  

              கடலூரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்கு உள்ளானது தொடர்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனையிடுமாறு, காவல் துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.   வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் தலைமையில் அதிகாரிகள் வியாழக்கிழமை கடலூர்- சிதம்பரம் சாலையில் வாகனச் சோதனை மேற்கொண்டனர். 190 ஆட்டோக்கள், 160 கார்கள், வேன்கள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட 350 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.  

             வாகனங்களில் அனுமதி சீட்டுக்குப் புறம்பாக, அதிக மாணவர்களை ஏற்றி வந்தது. காப்புச் சான்றிதழ் இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காக, 28 ஆட்டோக்கள், 12 இதர வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. சட்டத்துக்குப் புறம்பாக உரிய ஆவணங்கள் இல்லாமல், மாணவர்களை ஏற்றி வந்த ஒரு வாகனத்துக்கு அனுமதி ரத்து செய்து கைப்பற்றப்பட்டது என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior