உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 25, 2010

கடலூரில் பாதாளசாக்கடை திட்டத்தை நிறைவேற்ற கோரி அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் மனிதசங்கிலி போராட்டம்

கடலூர்:

               கடலூரில் பாதாள சாக்கடை திட்டத்தினை நிறைவேற்றக்கோரி அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் மனிதசங்கிலி போராட்டம் நடக்கிறது. கடலூர் நகரத்தில் பாதாளச் சாக்கடை திட்டம் குண்டும், குழியுமான அனைத்து சாலைகள், சுரங்கப்பாதை திட்டம் விரைவாக தொடங்கிட அனைத்து அரசியல் கட்சிகள் பொது நல அமைப்புகள் குடியிருப்பு சங்கம், அனைத்து தொழிற் சங்கங்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நடந்தது.

             அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.சி. சம்பத் தலைமை தாங்கி னார். அ.தி.மு.க. சார்பில் முருகமணி, மாவட்ட துணை செயலாளர் குமார், நகர செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயாளர் பழனிசாமி, ஒன்றிய செய லாளர் முத்துக்குமார சாமி. தே.மு.தி.க. சண்முகம், மாநில விவசாய தொழிலாளர் பிரிவு செயலாளர் கணேசன், ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், செல்வம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், தனசேகரன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சேகர், சம்பந்தம், வட்ட செயலாளர் ஜெகரட்சகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

              ஜனவரி 2, 3-ந் தேதிகளில் கடலூர் நகர் முழுவதும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரம் செய்வது, ஜனவரி 5-ந் தேதி மாலை 4 மணியளவில் அனைத்து பொது மக்களும் கலந்து கொள்ளும் மனித சங்கிலி போராட்டம் நடத்து வது என முடிவு செய்யப்பட்டது.
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior