உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 07, 2010

கடலூர் பஸ் நிலையத்தில் வெடிகுண்டு பீதி

கடலூர்:

                 கடலூர் மத்திய பஸ் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை நாள் முடிந்து சென்னை, பெங்களுர் போன்ற வெளியூர்களுக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் இரவில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. 
 
               இந்நிலையில் பஸ் நிலையத்தில் சென்னை பயணிகள் குவியும் இடத்திற்கு அருகில் வாளி ஒன்று அனாதையாக கிடந்தது. இந்த வாளி சுமார் 1 மணி நேரமாக அனாதையாக கேட்பாரற்று கிடந்ததால் பயணிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் நின்ற மக்கள் அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

                 இதுகுறித்த தகவல் அறிந்ததும், வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் ராமலிங்கம் தலைமையில் பஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். இவர்கள் அந்த மர்ம வாளியின் மீது ஒரு கயிற்றினை கட்டி இழுத்து அதனை திறந்து பார்த்த போது அதனுள் பிரியாணி சாதம் இருந்தது. இதனை கண்டபின்பு தான் பயணிகள், மற்றும் வியாபாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனை அடுத்து அந்த வாளி திருப்பாதிரிப்புலியூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior