உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 07, 2010

சிதம்பரம் பகுதியில் வெள்ளச்சேதங்களை விஜயகாந்த் பார்வையிட்டார்

                                                             சிதம்பரம் பகுதியில்
 
 வெள்ளச்சேதங்களை விஜயகாந்த் பார்வையிட்டார்
 
சிதம்பரம்:

                கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய தாலுகா பகுதி முற்றிலும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக தே.மு.தி.மு.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் நேற்று சிதம்பரம் வந்தார்.

                  அவர் சிதம்பரம் பாலமான்கரை நேரு நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார். தொடர்ந்து நந்திமங்கலம், குமராட்சி, கீழவன்னியூர், திருநாரையூர், வீரநத்தம் ஆகிய பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களையும் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, ரொட்டி வழங்கினார்.

அவருடன் மாவட்ட செயலாளர் சசிக்குமார், மாநில பட்டதாரி ஆசிரியர் அணி துணை செயலாளர் ராஜமன்னன், முன்னாள் மாவட்ட செயலாளர் உமாநாத், நகர செயலாளர் விஜயகுமார், மாவட்ட துணை செயலாளர்கள் பாலு, முகமது அயூப், ஒன்றிய செயலாளர்கள் சீனு.சங்கர், ராஜா, மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

                      நேற்று இரவு 10 மணிக்கு விஜயகாந்த் நெய்வேலி வந்தார். நெய்வேலி புதுநகர் 16-வது வட்டத்தில் உள்ள ஓட்டலில் தங்கினார். இன்று காலை 10 மணிக்கு புறப்பட்டு நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே உள்ள மேல்பாதி, கங்கைகொண்டான், பாப்பனப்பட்டு வளையமா தேவி, உ.மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.

                    மாநில அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, நகர செயலாளர் வெங்கடேசன், நகர தலைவர் மணிவண்ணன், வைத்திலிங்கம் உள்பட பலர் அவருடன் வந்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior