உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 08, 2010

பெண்ணாடத்தில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு

 
திட்டக்குடி:
 
              பெண்ணாடம் பேரூராட்சி மேற்கு ரத வீதி, நகர பகுதி முழுவதையும் நெடுஞ்சாலையுடன் இணைக்கும் பிரதான சாலையாகும். இந்த சாலை வழியாகத்தான் வடகரை, கோனூர், திருமலைஅகரம் உட்பட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும்.

                 நகரின் முக்கிய கோவில்களான விநாயகர் கோவில், பெருமாள் கோவில், சர்ச் ஆகிய பகுதிகளுக்கும் இந்த வீதி வழியாகத்தான் செல்ல வேண்டும். நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த வீதியில் தொடர் மழையால் தண்ணீர் தேங்கி நின்றதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் வெவ்வேறு தெருக்கள் வழியாகத்தான் தற்போது நெடுஞ்சாலைக்கு வருகின்றனர்.

                நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக தலையிட்டு போதிய வடிகால் வசதிக்கும், சாலை செப்பனிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி மன்ற தலைவர் அமுதலட்சுமி ஆற்றலரசு கோரிக்கை விடுத்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior