உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 08, 2010

கடலூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு கல்லூரிகளில் கல்வி உதவி தொகை

கடலூர் :

             கடலூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் உதவித் தொகை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

               கடலூர் மாவட்டத்தில் 2010 - 11ம் ஆண்டு கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்க சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் அனுப்பிய விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டது. தகுதியான கோப்புகளுக்கு வரவோலைகள் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

                எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் கல்வி உதவித் தொகை கோரி மனு செய்தவர்கள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களில் உதவித் தொகையை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior