உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 08, 2010

நெடுஞ்சாலைத் துறை வளாகத்தில் நண்டுவாக்களிகள் பிடிபட்டன



கடலூர் : 

             கடலூர் நெடுஞ்சாலைத் துறை வளாகத்தில், தினமலர் செய்தி எதிரொலியால் புதர்கள் அகற்றப்பட்ட போது நண்டுவாக்களி மற்றும் பாம்புகள் பிடிபட்டன.

              கடலூர் பீச் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை வளாகத்தில் கோட்டப் பொறியாளர், உதவி கோட்டப் பொறியாளர், உதவி பொறியாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதில் கோட்டப் பொறியாளர் அலுவலகம் பழமையான கட்டடம் என்பதாலும், மேல் தளத்தில் அதிகளவில் இலைச் சருகுகள் இருந்ததாலும் தண்ணீர் தேங்கி கட்டடத்தினுள் கசிந்தது. மேலும், இக்கட்டடத்தைச் சுற்றிலும் மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடந்தன. 

                   புதர்களில் இருந்து வரும் பாம்புகள் அலுவலகத்தில் படையெடுக்க துவங்கியதால் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அச்சத்திலேயே பணிபுரிந்து வந்தனர். இதையடுத்து, பொறியாளர் அலுவலக வளாகத்தை சுற்றிலும் இருந்த மரங்கள், செடி, கொடிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அதிரடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின், பாம்புகளை பிடிக்க கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த பூனம் சந்த் வரவழைக்கப்பட்டார். இவர் எட்டு காளியாங்குட்டி பாம்புகளை பிடித்தார். இவை அனைத்தும் இரண்டரை அடி முதல் மூன்றடி நீளம் வரை இருந்தன. மேலும், 40 நண்டுவாக்களிகளும் பிடிபட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior