உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 08, 2010

கடலூர் நகராட்சிக்கு மத்திய அரசின் மதிப்பெண்

கடலூர்:
              
             சுமார் 2 லட்சம் மக்கள்தொகை கொண்ட சிறிய நகரம் கடலூர். 500 ஆண்டுகளுக்கு மேல் தொன்மை வாய்ந்த நகரம் இது.

                ஆங்கிலேயர்கள் வணிகத்துக்காகத் தமிழகத்துக்குள் நுழைந்தபோது அமைத்துக் கொண்ட முதல் தலைநகரம் கடலூர். அவர்கள் கட்டிய முதல் கோட்டை, கடலூர் புனித டேவிட் கோட்டை. சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் இருப்பதால், அரசியல், சமூக, பொருளாதார முன்னேற்றங்களுக்காக மாநிலத் தலைமை அலுவலகங்களைத் தொடர்பு கொள்வது கூட, கடலூர் மாவட்ட நிர்வாகத் தலைவர்களுக்கு எளிதான விஷயம்.

               நூற்றுக்கணக்கான கோடி முதலீட்டில் ரசாயனத் தொழிற்சாலைகளை, பன்னாட்டு நிறுவனங்கள் அமைத்துக் கொள்ள மத்திய அரசு, தாராளமாக இடம் ஒதுக்கி இருக்கும் நிலங்கள், கடலூரை அடுத்துள்ள கடற்கரையில்தான் அமைந்துள்ளன. இத்தகைய புகழ்மிக்க நகரம் சுகாதாரக் கேட்டின் விளிம்பில் உள்ளது.கடலூர் மக்கள் ஆண்டுக்கு ரூ. 10 கோடி வரியாகச் செலுத்துகிறார்கள். ஆனால் சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பெறுவதில் கடலூர் மக்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.

                மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அண்மையில் இணைய தளத்தில் வெளியிட்டு இருக்கும், இந்திய நகராட்சிகளின் சுகாதாரம் மற்றும் குடிநீர் தரம் பற்றிய அறிக்கையில் (ரிப்போர்ட் கார்டு) கடலூர் நகராட்சிக்கு அளித்து இருக்கும் சான்றிதழ் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.அந்த அறிக்கையில் ஒவ்வொரு, இனங்களிலும் 

கடலூர் நகராட்சிக்கு அளித்திருக்கும் மதிப்பெண் கீழே தரப்படுகிறது 

(அடைப்புக் குறிக்குள் இருப்பது பெறவேண்டிய மொத்த மதிப்பெண்):
நகரில் ஏழைகளுக்குக் கிடைத்துள்ள தனிப்பட்ட மற்றும் சமூக கழிப்பிட  சுகாதார வசதிகள்: 0 (4). 

நகருக்குள் வந்து போகும் மக்கள் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த மக்களுக்குக் கிடைத்திருக்கும் கழிப்பறை வசதிகள்: 1.48 (4).

நகரில் திறந்தவெளிகளை கழிப்பிடமாகப் பயன்படுத்தாமல் இருப்பது: 0 (4).

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றி இருப்பது: 4 (4). 

மனிதக் கழிவுகளை பாதுகாப்புடன் சேகரிப்பது: 3 (6). 

நகரில் உற்பத்தியாகும் மிக மோசமான கழிவுகளை சுத்திகரித்து பாதுகாப்புடன் வெளியேற்றுவதல்: 0 (6). 

நகரில் உற்பத்தியாகும் நடுத்தர கழிவுகளை சுத்திகரித்து பாதுகாப்புடன் வெளியேற்றுதல்: 0 (3).

நகரில் உற்பத்தியாகும் கழிவு நீரை மறுசுழற்சி செய்து உபயோகித்தல்: 0 (3). 

மழைநீரை பாதுகாப்புடன் வெளியேற்றுதல்: 1 (3). 

மொத்த திடக் கழிவுகளையும் அவ்வப்போது சேகரித்தல்: 1 (4). 

மொத்த திடக்கழிவுகளையும் சுத்திகரித்து பாதுப்புடன் அகற்றுதல்: 0 (4).

நகரக் கழிவுகளால் சுற்றுப் புறங்களில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தாமல் இருத்தல்: 0 (5). 

திறந்தவெளிகள் கழிப்பிடமாக மாற்றுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள்: 0 (4). 

கழிவுகள் அகற்றும் அமைப்புகளின் சரியான செயல்பாடுகள்: 0 (5). 

மழைநீர் அகற்றும் அமைப்புகள் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள்: 2 (4).

நகர மக்களுக்கு விநியோகிக்கும் குடிநீரின் தரம்: 1.75 (7). 

நகர மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நீராதாரங்களின் தரம்: 0 (7). 

தண்ணீரால் உண்டாகும் நோய்களை கட்டுப் படுத்தும் நடவடிக்கைகள்: 3 (6).

                 ஏனைய நகராட்சிகளுக்கு வழங்குவதைப் போல் கடலூர் நகராட்சிக்கும் அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. இருப்பினும் இந்த அவலநிலை ஏன் என்று தெரியவில்லை.சுனாமி நிவாரணப் பணிகளுக்காக மட்டும், கடலூர் நகராட்சிக்கு ரூ. 35 கோடிக்கு மேல் வழங்கப்பட்டது. 2004 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் மட்டும் கழிப்பறைகள் கட்டுவதற்கு ரூ. 2 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுளளது. ஆனால் அவை எல்லாம் பராமரிப்பு இன்றி சிதைந்து கிடக்கின்றன.

               கடலூர் நகராட்சிக்கு வரவேண்டிய வரிபாக்கி மட்டும் ரூ. 17 கோடி என்று அண்மையில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வரி பாக்கியை வசூலிக்க நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. தற்போது வசூலிக்கப்படும் வரி முழுவதும் நகராட்சி ஊழியர்களுக்கு ஊதியமாகவும், மின் கட்டணம் மற்றும் குடிநீர் திட்டப் பராமரிப்புப் பணிகளுக்குச் சரியாகிவிடுவதாகக் கூறப்படுகிறது.இதனால் பொதுநிதியில் பணம் இல்லை. பொதுநிதியில் பணம் இருந்தால்தான் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளமுடியும் என்கிறது நகாராட்சி நிர்வாகம். சில சிறப்பு திட்டங்களுக்கு அரசு நிதி வழங்குகிறது என்றும் நகராட்சி தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior