
கடலூர்:
வங்க கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கடந்த மாதம் கன மழை நீடித்தது.
இதனால் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ள சேத பகுதிகளை மத்தியகுழுவினர் கணக்கெடுத்து உள்ளனர். தற்போது வெள்ளம் வடிந்த நிலையில் கடலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் நேற்று காலை திடீர் என மழை பெய்தது. இதன் காரணமாக அலுவலகம் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் பாதிக்கப்பட்டனர். இதே போல நெய்வேலி, பண்ருட்டி ஆகிய பகுதியிலும் லேசான சாரல் மழை பெய்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக