உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 05, 2011

நெல்லிக்குப்பத்தை அடுத்த காராமணிக்குப்பம் சந்தையில் காய்கறி விலை “கிடுகிடு” உயர்வு

நெல்லிக்குப்பம்:

            நெல்லிக்குப்பத்தை அடுத்த காராமணிக்குப்பத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறும். நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் காய்கறிகளின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது.

          கடந்த சில நாட்களுக்கு முன் விற்பனையான 1 கிலோ 16-க்கு விற்ற பீட்ரூட் நேற்று ரூ.30-க்கு விற்கப்பட்டது. பெரிய பெல்லாரி 1 கிலோ ரூ.60-க்கும், நடுத்தர பெல்லாரி ரூ.30-க்கும், சாம்பார் வெங்காயம் 1 கிலோ ரூ.50-க்கும், தக்காளி 1 கிலோ ரூ.35-க்கும் விற்கப்பட்டது. சவ்சவ் 1 கிலோ ரூ.20-க்கும், உருளை கிழங்கு 1 கிலோ ரூ.18-க்கும், பீன்ஸ், காரட் 1 கிலோ தலா ரூ.40-க்கும், கோசு 1 கிலோ ரூ.20-க்கும், முள்ளங்கி 1 கிலோ ரூ.24-க்கும், பச்சை மிளகாய் 1 கிலோ ரூ.20-க்கும், கருணை கிழங்கு 1 கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரையும் விற்பனை செய்யப்பட்டது. பூண்டு 1 கிலோ ரூ.200 முதல் ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior