உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 05, 2011

கடலூர் சில்வர் பீச் புதுப்பிக்கப்பட்ட புறக்காவல் நிலையம் திறப்பு

கடலூர்:

             புதுப்பிக்கப்பட்ட கடலூர் சில்வர் பீச் புறக்காவல் நிலையத்தை, கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் அண்மையில் திறந்து வைத்தார். 

              கடலூர் சில்வர் பீச் புறக்காவல் நிலையம், தரைத்தளத்திலும் முதல் தளத்தில் ஹோட்டலும் இருந்தது. சுனாமியின்போது புறக்காவல் நிலையம் பலத்த சேதமடைந்தது. அதன்பிறகு புதுப்பிக்கப்பட்டது. முதல் தளம் பயன்படுத்தப்படாமல் இருந்தது.  இந்த முதல் தளம் தற்போது நவீனப்படுத்தப்பட்டு, போலீஸ் அதிகாரிகள் தங்கும் விடுதியாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

                புறக்காவல் நிலையம் முன் அழகிய  புல்வெளி அமைக்கப்பட்டு உள்ளது. தங்கும் விடுதியுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட சில்வர் பீச் புறக்காவல் நிலையத்தை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.  நிகழ்ச்சியில் கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior