உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 17, 2011

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டைக்கு 19-ந் தேதி விண்ணப்பிக்கலாம்

கடலூர்:

               வாக்காளர் அடையாள அட்டைகளைத் தொலைத்திருந்தாலோ, சேதம் அடைந்து இருந்தாலோ, புதிய வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

              தொலைந்துபோன மற்றும் சேதமடைந்த வாக்காளர் அடையாள அட்டைகளுக்குப் பதில், புதிய வாக்காளர் அட்டைகளை பெறுவதற்கு, 19, 20-ம்  தேதிகளில் விண்ணப்பிக்கலாம். இதற்காக 001.சி படிவம் மற்றும் உறுதிமொழிப் படிவங்களுடன், வீட்டு முகவரிக்கான சான்று, புகைப்படத்துடன் கூடிய ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கி, அஞ்சலக கணக்கு பாஸ் புத்தகம், பேன் கார்டு, அரசு அடையாள அட்டை, மாணவர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றுடன், சம்மந்தப்பட்ட குறு வட்டங்களில் உள்ள வருவாய் ஆய்வாளரிடம் பூர்த்தி செய்து அளிக்கலாம்.

               நகல் அட்டை மார்ச் 5, 6 தேதிகளில் அதே வருவாய் ஆய்வாளரிடம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior