உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 04, 2011

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு மாணவர்களுக்கு வினா - விடை புத்தகம்

கடலூர்:

              ஐ லவ் இந்தியா அறக்கட்டளை சார்பில், கடலூரை அடுத்த பெரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு வினா- விடை வங்கி புத்தகம் இலவச மாக வழங்கப்பட்டன.  

              இதற்கான விழா பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடந்தது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுத இருக்கும் 100 மாணவ, மாணவியருக்கு வினா விடை வங்கி புத்தகங்களை, பி.எஸ்.என்.எல். மக்கள் தொடர்பு அலுவலர் கவிஞர் என்.பால்கி வழங்கி உரை நிகழ்த்தினார்.   நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஐ லவ் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் தலைவர் ஜனார்த்தனன், வணிக வரித்துறை பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் புகழேந்தி, மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் மனோகரன், சுரேஷ், சிங்காரவேல், முத்தமிழ்வேந்தன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior