உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 10, 2011

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் 23ம் தேதி முதல் 43 மையங்களில் நடக்கின்றன

                 பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை, வரும் 23ம் தேதி துவக்கி, ஏப்ரல் 11ம் தேதிக்குள் முடிப்பதற்கு, தேர்வுத்துறை முடிவெடுத்துள்ளது. விடைத்தாள் திருத்தும் மையங்களின் பொறுப்பாளர்கள், வரும் 17ம் தேதி பொறுப்பேற்கின்றனர். 

               கடந்த 2ம் தேதி முதல், பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகின்றன. 7 லட்சத்து 23 ஆயிரம் மாணவர்கள், இத்தேர்வை எழுதி வருகின்றனர். இதுவரை, மொழிப்பாட தேர்வுகள் முடிந்துள்ளன. அறிவியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்களுக்கான தேர்வுகள், வரும் 11ம் தேதி முதல் நடக்கிறது. தொடர்ந்து, 25ம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன. இதற்கிடையே, விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிப்பது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 

                 தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், விடைத்தாள் திருத்தும் மையங்களின் பொறுப்பாளர்களான முதன்மைக் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர். "எந்தவித குளறுபடிகளும் இன்றி, விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்' என, இயக்குனர் கூறியதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணிகள், வரும் 23ம் தேதி முதல், 43 மையங்களில் நடக்கின்றன. 

                 முன்னதாக, விடைத்தாள் திருத்தும் மையங்களின் பொறுப்பாளர்கள், வரும் 17ம் தேதி பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றனர். சட்டசபை தேர்தல், ஏப்ரல் 13ம் தேதி நடக்கிறது. இதற்கு முன்னதாக 11ம் தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணிகளை முடிக்க வேண்டுமென, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மே 14ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டும், மே இரண்டாவது வாரத்திற்குள் முடிவுகளை வெளியிட, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior