உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 10, 2011

கடலூர் மாவட்டத்தில் பதட்டம் மிகுந்த ஓட்டுச் சாவடி பாதுகாப்பு பணியில் மாணவர்கள்

கடலூர் : 

              மாவட்டத்தில் பதட்டம் நிறைந்த ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப் பதிவை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் ஈடுபடவுள்ளனர்.

               மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக அமைக்கப்பட்டுள்ள 1,945 ஓட்டுச் சாவடிகளில் 1,165 பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள் ளது.இந்த ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவை முழுமையாக கண்காணிக்கும் பொருட்டு "வெப் கேமரா' மூலம் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில் நுட்பம் படிக்கும் மாணவர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

                அதன்படி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக துணைவேந்தர், பதிவாளர் மற்றும் தொழில் நுட்பத்துறை அதிகாரியும் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் சீத்தாராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், பல்கலைக் கழகத்தில் எம்.சி.ஏ., மற்றும் எம்.இ., படிக்கும் மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோரை "லேப்-டாப்' சாதனத்துடன் பதட்டம் நிறைந்த ஓட்டுச் சாவடிகளில் பணிக்கு அனுப்ப பல்கலை நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஓட்டுச்சாவடி பணியில் ஈடுபடவுள்ள மாணவர்களுக்கு கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீரராகவராவ் பயிற்சி அளிக்க உள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior