உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 10, 2011

கடலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு பணி தீவிரம்

கடலூர் : 

            தமிழகத்தில் புதிய வாக்காளர்கள் சேர்க்க ஆணையம் அவகாசம் அளித்துள்ளதால் பொது மக்களிடமிருந்து மனுக்கள் குவிந்துள்ளன. கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் சேர்த்து 16,45,143 வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர்கள் சேர்க்க வரும் 14ம் தேதி வரை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
 
                கடைசி நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பொது மக்களிடமிருந்து ஏராளமான மனுக்கள் குவிந்து வருகின்றன. அதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் 49,000 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் 32,000 பேர் மனு செய்துள்ளனர். இவற்றை குறிப்பிட்ட தேதிக்குள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதால் 15 கம்ப்யூட்டர்கள் வாங்கப்பட்டு தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior