உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 02, 2011

சிதம்பரத்தில் இன்று 30வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா





சிதம்பரம் : 

           சிதம்பரம் நடராஜர் கோவிலில், 30வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, இன்று துவங்குகிறது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், 1981 முதல், 29 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட, பல்வேறு நாடுகளில் இருந்தும் நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டிய திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு, 30வது நாட்டியாஞ்சலி விழா, இன்று துவங்கி, 6ம் தேதி வரை நடக்கிறது. டில்லி சங்கீத நாடக அகடமி தலைவர் லீலா சாம்சன் துவக்கி வைக்கிறார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior