உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 02, 2011

தமிழகத்தில் 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள்

        தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷி, தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிப்பை 01.03.2011 அன்று வெளியிட்டார். 

அப்போது தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷிபேசுகையில்,

             தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 44 தொகுதிகள் தாழ்த்தப்பட்டோருக்கும் (ரிசர்வ்.), 2 தொகுதிகள் பழங்குடியினத்தவருக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது. தேர்தலையொட்டி மொத்தம் 54 ஆயிரத்து 16 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 பேர்.

             தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களில் 99.85 சதவீதம் பேருக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதை 100 சதவீதமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 5 தொகுதிகள் ரிசர்வ் தொகுதிகள் ஆகும். அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன.

             புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இல்லாமல் ஓட்டு போட முடியாது. இந்த அட்டை இல்லாத வாக்காளர்கள், அருகில் உள்ள தேர்தல் பதிவு அலுவலகத்துக்குச் சென்று வாக்காளர் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior