உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 09, 2011

கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களின் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்

கடலூர்:

              கடலூர் புனித வளனார் கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்  நடத்தினர்.  

           சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதை முன்னிட்டு இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது. ஆட்சியர் அலுவலகம் அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு, திருப்பாப்புலியூர் உழவர் சந்தை அருகே முடிவடைந்தது. ஊர்லத்துக்கு புனித வளனார் கல்லூரி முதல்வர் ஐ.ரட்சகர் அடிகள் தலைமை தாங்கினார். கடலூர் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன் தொடங்கி வைத்தார்.  பேராசிரியர்கள் அருமைச் செல்வம், ஜெயந்தி ரவிச்சந்திரன், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.  

              ஊர்வலத்தில் சென்ற மாணவர்கள், வாக்காளர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். பணத்துக்காக வாக்குரிமையை விற்றுவிடக் கூடாது, சிறந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior