உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 17, 2011

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையில் பிழைகள்

கடலூர் : 

          கடலூர் மாவட்டத்தில் தற்போது வழங்கப்பட்டு வரும் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் மற்றும் விலாசங்கள் மாறியுள்ளதால் வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

             கடலூர் மாவட்டத்தில், வாக்காளர் அடையாள அட்டை வழங்காதவர்களுக்கு தற்போது அடை யாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கடலூர் பகுதியில் உள்ளவர்களுக்கு நகராட்சி அலுவலகத்தில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அடையாள அட்டை பெற்ற பலர் அதிர்ச்சியடைந்தனர். விண்ணப்பம் செய்தவரின் பெயருக்கு பதிலாக அவரது தந்தை பெயர் அல்லது வேறு ஒருவருடைய பெயர் இடம் பெற்றுள்ளது.மேலும் விலாசங்கள் மாறியுள்ளது. 

             கடலூரில் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி ரேவதி தனது அடையாள அட்டையை வாங்கி பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். அடையாள அட்டையில் ரேவதியின் படம் உள்ளது. ஆனால் பெயர் குறிப்பிட்டுள்ள இடத்தில் கருணாமூர்த்தி என ஆண் பெயர் இடம் பெற்றுள்ளது. இதுபோன்று வழங்கப்பட்ட பலரின் அடையாள அட்டையில் பங்வேறு குழப்பங்கள் உள்ளதால் வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று கேட்டபோது உரிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்குமாறு கூறியுள்ளனர். இதனால் வாக்காளர் கள் அதிருப்தி அடைந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior