உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 18, 2011

வேலூர் விஐடி நுழைவுத் தேர்வு: 1.66 லட்சம் பேர் பங்கேற்பு

வேலூர்:

               விஐடி பல்கலைக் கழகத்தின் பி.டெக் நுழைவுத் தேர்வை 1 லட்சத்து 66 ஆயிரத்து 493 மாணவ, மாணவியர் சனிக்கிழமை எழுதினர்.

              பல்கலைக் கழகத்தில் 2011-12-ம் கல்வியாண்டில் பி.டெக் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பயோ டெக்னாலஜி உள்ளிட்ட 13 பாடப் பிரிவுகளில் சேருவதற்கு இத்தேர்வு நடத்தப்பட்டது. நாட்டில் 105 நகரங்களிலும், துபாய், ரியாத் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இத்தேர்வு நடத்தப்பட்டது. 

              மொத்தம் 243 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. தில்லியில் நடந்த தேர்வை வேந்தர் ஜி. விஸ்வநாதன், துணைத் தலைவர் ஜி.வி. சம்பத் ஆகியோர் பார்வையிட்டனர். மும்பையில் நடந்த தேர்வை துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதனும், சென்னையில் நடந்த தேர்வை ஜி.வி. செல்வமும், துபாயில் நடந்த தேர்வை துணைத் தலைவர் சேகர் விஸ்வநாதனும் பார்வையிட்டனர். நுழைவுத் தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியிடப்படுகிறது. 

நுழைவுத் தேர்வில் தகுதி பெறுவோருக்கு ரேங்க் அடிப்படையில் பி.டெக். பட்டப்படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு ஜூன் 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை வேலூர் மற்றும் சென்னை விஐடி வளாகங்களில் நடைபெறுகிறது.

 மேலும் விபரங்களுக்கு 



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior