உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 11, 2011

ஐஐடி நுழைவுத் தேர்வு: நாடு முழுவதிலுமிருந்து 4 லட்சத்து 85 ஆயிரத்து 262 பேர் பங்கேற்ப்பு

            ஐஐடி-க்களில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் சென்னை மண்டலத்திலிருந்து 65 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.  

              புவனேசுவரம், சென்னை, தில்லி, காந்தி நகர், குவாஹாட்டி, ஹைதராபாத், இந்தூர், ஜோத்பூர், கான்பூர், கரக்பூர், மண்டி, மும்பை, பாட்னா, ரோப்பர், ரூர்க்கி உள்ளிட்ட 15 இடங்களில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஐஐடி-ஜீ நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.  நாடு முழுவதிலுமிருந்து 4 லட்சத்து 85 ஆயிரத்து 262 பேர் இந்தத் தேர்வை எழுதினர். தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடாகம் உள்ளிட்டப் பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மண்டலத்திலிருந்து 65 ஆயிரத்து 650 பேர் தேர்வு எழுதினர்.  

            நாடு முழுவதும் 130 நகரங்கள், துபையில் ஒரு மையம் என மொத்தம் 1,051 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது.  நுழைவுத் தேர்வு முடிவுகள் மே 25-ம் தேதி வெளியிடப்படும். எந்த ஐஐடி நிறுவனத்தில் படிக்க விருப்பம் உள்ளது என்பதை மே 30-ம் தேதியிலிருந்து ஜூன் 13-ம் தேதிக்குள் மாணவர்கள் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior