உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 05, 2011

வணிகர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் இருந்து 250 வாகனங்களில் வணிகர்கள் சென்னை பயணம்

கடலூர்:

          வணிகர் தினத்தை (மே 5) முன்னிட்டு சென்னையில் வியாழக்கிழமை நடைபெறும் வணிகர் சங்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடலூர் மாவட்டத்தில் இருந்து 250 வாகனங்களில் வணிகர்கள் புதன்கிழமை புறப்பட்டனர்.  

              இத்தகவலை வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கடலூர் மண்டல (கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள்) தலைவர் சண்முகம் புதன்கிழமை தெரிவித்தார். 

மேலும் கடலூர் மண்டல தலைவர் சண்முகம் கூறியது:  

             வணிகர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் வணிகர்கள், சென்னை ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி வளாகத்தில் நடைபெறும் மாநாட்டுக்குச் செல்வதாகவும், 250 வாகனங்களில் வணிகர்கள் செல்கின்றனர்.  வணிகர் தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை கடலூர் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் கடைகள் முடப்பட்டு இருக்கும். அட்சய திரிதியை முன்னிட்டு நகைக் கடைகளுக்கு கடையடைப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது, அவர்கள் 10 மணிக்கு மேல் கடை திறப்பார்கள் என்றும் சண்முகம் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior