உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 02, 2011

கடலூரில் பாதாள சாக்கடை பணியின்போது மண்ணுக்குள் புதைந்த தொழிலாளி


கடலூர்:
 
      கடலூரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ராட்சத குழாய்கைள பதிக்கும் பணிக்காக நாமக்கல்லில் இருந்து சுமார் 20 தொழிலாளர்கள் கடலூர் வந்துள்ளனர். சனிக்கிழமை  காலை அவர்கள் 10 அடி பள்ளத்தில் இறங்கி குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

             அவர்கள் அந்த வேலையில் மும்முரமாக இருந்தபோது திடீரென மண் சரிந்து விழுந்தது. இதில் நாமக்கல்லை சேர்ந்த சேகர் (40) மண்ணுக்குள் புதைந்தார். கழுத்துவரை மண்மூடப்பட்டு உயிருக்கு போராடிய சேகரை மீட்க கடலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி சேகரை உயிருடன் மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 1/2  மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior