உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 02, 2011

விருத்தாசலம் ஓட்டு எண்ணும் மையத்தை தே.மு.தி.க.வேட்பாளர் பார்வை

விருத்தாசலம் : 

                  விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி ஓட்டு எண்ணும் மையத்தை தே.மு.தி.க., வேட்பாளர் முத்துக்குமார் பார்வையிட்டார். 

             விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி தொகுதிகளின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. வரும் 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஓட்டு எண்ணும் மையத்தில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் தொடர்ந்து ஓட்டு எண்ணும் மையத்கை கண்காணித்து வருகின்றனர். 

            வேட்பாளர்கள் ஓட்டு எண்ணும் மையத்தை அவ்வப்போது பார்வையிட்டு வருகின்றனர். கலெக்டர், டி.ஐ.ஜி., - எஸ்.பி., ஆகியோரும் ஓட்டு எண்ணும் மையங்களை பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கி வருகின்றனர். விருத்தாசலம் பகுதியில் கடந்த 29ம் தேதி வீசிய சூறைக் காற்றில் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் ஓட்டு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த உயர் கண்காணிப்பு கோபுரம் சாய்ந்தது. இதனை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளனர். இந்நிலையில் தே.மு.தி.க., வேட்பாளர் முத்துக்குமார் ஓட்டு எண்ணும் மையத்தை பார்வையிட்டு பதிவேட்டில் கையெழுத்திட்டார். அப்போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior