உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 25, 2011

விண்டேன் பூச்சி மருந்து விற்பனை செய்ய அரசு தடை

கடலூர் : 

                    விண்டேன் பூச்சி மருந்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

             வேளாண் உபயோகத்திற்காக விவசாயிகள் பயன்படுத்தி வரும் விண் டேன் பூச்சி மருந்து உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன்படி விண்டேன் உற்பத்தி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு ஆணை வெளியிடப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விண்டேன் பூச்சி மருந்தை விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் ஆணையை மீறும் பூச்சி மருந்து உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior