உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 25, 2011

கூட்டுறவு மேலாண்மை படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

கடலூர் : 

             உயர்மட்ட பட்டய கூட்டுறவு மேலாண்மை படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

          சென்னை, அண்ணா நகரில் இயங்கி வரும் நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் இந்த ஆண்டிற்கான உயர்மட்ட பட்டய கூட்டுறவு மேலாண்மை படிப்பு வரும் ஜூலை 14ம் தேதி முதல் 2012 மார்ச் 21ம் தேதிவரை நடைபெற உள்ளது. பயிற்சி காலத்தில், கூட்டுறவுத் துறையில் நன்கு முன்னேறிய வெளி மாநிலங்களுக்கு இரண்டு வாரங்கள் அழைத்துச் சென்று, அங்கு கூட்டுறவு நிறுவனங்களின் செயல்பாடு குறித்து விளக்கப்படும். 

              மேலும், ஏதேனும் ஒரு கூட்டுறவு நிறுவனத்தில் ஏழு நாட்கள் தங்கி அந்த கூட்டுறவு நிறுவன செயல்பாடு குறித்து திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும். இந்த பயிற்சியில் சேர வரும் ஜூன் 1ம் தேதி அன்று 30 வயதிற்குட்பட்டவராகவும், பட்டதாரியாகவும் இருக்க வேண்டும். பயிற்சி கட்டணம் 10 ஆயிரம் ரூபாயை மூன்று சம தவணைகளில் செலுத்தலாம். 

பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பம் பெற 

முதல்வர், 
நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், 
2377-ஏ, அண்ணா நகர், 
சென்னை-40 

             என்ற முகவரிக்கு 100 ரூபாய் "டிடி' அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். 

மேலும் விவரம் வேண்டுவோர் 

044-26211423, 044-26210423

             ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior