உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 04, 2011

பண்ருட்டியில் பலா சீசன் தொடங்கியது


பண்ருட்டியில் இருந்து வெளியூருக்கு கொண்டு செல்வதற்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள பலாப்பழங்கள்.
 
பண்ருட்டி:
 
           பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் பண்ருட்டி சந்தையில் பலாப்பழத்தின் வரத்து அதிகரித்துள்ளது. சீசன் தொடக்கம் என்பதால் சராசரி அளவுள்ள ஒரு பழத்தின் விலை ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
 
              பலாப்பழம் என்றவுடன் அனைவரின் நினைவுக்கு வருவது பண்ருட்டி. பண்ருட்டி கெடில ஆற்றுக்கு தென்பகுதியில் வளம் நிறைந்த செம்மண் நிலப்பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள முந்திரி காடுகளுக்கு இடையேயும், வீட்டுத் தோட்டத்திலும் பலா மரம் வளர்க்கப்படுகிறது. இப்பகுதியில் விளையும் பலாப்பழம் சுவை அதிகம் கொண்டது. இதனால் தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பண்ருட்டி பலாப்பழத்தை விரும்புவர். பண்ருட்டியில் இருந்து நாள்தோறும் டன் கணக்கிலான பலாப்பழங்கள் லாரிகள் மூலம் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
 
இதுகுறித்து பலா விவசாயிகள் சீரங்குப்பம் ஆர்.மணிவண்ணன், சாத்திப்பட்டு ஏழில் கூறியது: 
 
               மார்ச் மாதம் முதல் ஜுன் மாதம் வரை பலாப்பழம் சீசன். அவ்வப்போது காய்கள் பழுத்துள்ளதா, பூச்சி தாக்கியுள்ளதா, களவு போகாமல் உள்ளதா என பார்க்க வேண்டும். குறைவான எண்ணிக்கையில் பலா மரம் வைத்துள்ளவர்கள் அவர்களே பராமரித்துக் கொள்வர். அதிக அளவில் மரம் வைத்துள்ளவர்கள் குத்தைகைக்கு விட்டுவிடுவர்.குத்தகை விடும்போது மரத்தின் தரம், காயின் சுவை மற்றும் அளவு ஆகியவற்றை கணக்கிட்டு பிஞ்சு ஒன்று ரூ.30 முதல் 40 வரையில் விலை பேசி ஒப்பந்தம் செய்வர். மரத்தின் அளவு மற்றும் வயதுக்கு தகுந்தால் போல் 20 முதல் 50 பிச்சுகள் வரைவிட்டுவிட்டு. எஞ்சிய பிஞ்சுகளை கழித்துவிடுவர். அதிக அளவு பிஞ்சுகளை மரத்தில் விட்டால் மலட்டு தன்மை அடைவதுடன் சில சமயத்தில் மரம் இறந்துவிடும். இன்னும் ஓரிரு வாரத்தில் முழு அளவில் பலாப்பழம் அறுவடை தொடங்கிவிடும் என கூறினர்.
 
இது குறித்து பலாப்பழம் கமிஷன் மண்டி வைத்துள்ளவர்கள் கூறியது: 
 
               விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் அறுவடை செய்து கொண்டு வரும் பலாப்பழங்களை பெற்று விற்று கொடுத்து வருகின்றோம். இதற்கு ஊதியமாக குறிப்பிட்ட அளவு கழிவு பெற்றுக் கொள்வோம். பண்ருட்டியில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், மும்பை, பெங்களூர், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு டன் கணக்கில் ஏற்றுமதி செய்து வருகின்றோம். மும்பையில் பலாப்பழத்தில் ஜூஸ் அதிக அளவு விற்பனை ஆவதல் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior