உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 06, 2011

சிதம்பரத்தில் டி.என்.பி.எஸ்.சி . குரூப்-1 தேர்வு: 3,083 பேர் பங்கேற்பு

சிதம்பரம் : 

             சிதம்பரத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வை 3,083 பேர் ஆர்வமுடன் எழுதினர். சிதம்பரத்தில் 10 மையங்களில் டி.என்.பி. எஸ்.சி., குரூப்-1 தேர்வு நேற்று நடந்தது. 

          சிதம்பரம் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி, ஆறுமுக நாவலர், நந்தனார் ஆண்கள், பெண்கள், நிர்மலா மெட்ரிக், வீனஸ், காமராஜ், அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, ராமசாமி செட்டியார் பள்ளி, ராமகிருஷ்ணா பள்ளி என 10 மையங்களில் தேர்வு நடந்தது. ஆண்கள் பெண்கள் என மொத்தம் 4,026 பேர் தேர்வு தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அதில் 3,083 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
 
           சிதம்பரம் ஆர்.டி.ஓ., இந்துமதி, டி.எஸ்.பி., நடராஜன் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டது. டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் தேர்வு நடைபெறும் பள்ளிகளை பார்வையிட்டார். மேலும் தாசில்தார்கள் ராஜேந்திரன், பாண்டுரங்கன் மற்றும் வருவாய் துறையினர் தேர்வு மையங்களுக்கு தேவையான ஆயத்த பணிகளை செய்திருந்தனர். 




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior