உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 06, 2011

கடலூர் மாவட்டத்தில் வெள்ளரிக்காய் அமோக விளைச்சல்

கடலூர்:

            அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் முடிந்த பிறகும், தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கோடை வெயில் தகித்துக் கொண்டு இருக்கிறது. 

          பல ஊர்களில் இன்னமும் 100 டிகிரியில் இருந்து வெப்பம் குறைந்த பாடில்லை. வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட மக்கள் இளநீர், நுங்கு, பதநீர், பழங்கள் மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிடுகின்றனர். ஏழை எளிய மக்களும் வாங்கிச் சாப்பிடும் விலையில் கிடைப்பது வெள்ளரிக்காய்தான். இளநீருக்கு இணையானது வெள்ளரிக்காய் என்று இந்திய மருத்துவம் தெரிவிக்கிறது.
 

           வெள்ளரிக்காய் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கோடைகாலப் பயிராக விளைகிறது. அதிக தண்ணீர் தேவையின்றி, பராமரிப்புச் செலவுகள் இன்றி, விவசாயிகளுக்கு லாபம் தரும் பயிர் வெள்ளரிக்காய். திண்டிவனம், மதுராந்தகம் உள்ளிட்ட வடமாவட்டப் பகுதிகளில் ஜெர்க்கி என்ற புதியரக வெள்ளரிக்காய் அதிகம் பயிரிடப்படுகிறது. இதில் நீர்ச்சத்து அதிகம். ஆனால் பெருவாரியாக நாட்டு ரகமே பயிரிடப்படுகிறது. நாட்டு ரக வெள்ளரிக்காய்தான் மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது.
 

           கடலூர் மாவட்டத்தில், சம்பா சாகுபடி முடிவுற்றதும், வயல்களில் பெருவாரியாக, தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். புவனகிரி, முட்லூர், புதுச்சத்திரம், ஆண்டிக்குழி, வடலூர், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டு வெள்ளரி விளைச்சல் அமோகமாக உள்ளது. வெள்ளரித் தோட்டங்களில் 10 கிலோ கொண்ட கூடை ரூ. 100 முதல் ரூ. 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
 
             ஏக்கருக்கு 2 ஆயிரம் கிலோ வரை வெள்ளரிக்காய் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். சிறுவியாபாரிகள் வெள்ளரிக்காய் மற்றும் வெள்ளரிப் பழங்களை வாங்கி வந்து நகர்ப் புறங்களில் விற்பனை செய்கிறார்கள். வெள்ளரிப் பழங்கள் கூடை கூடையாக தற்போது விற்பனைக்கு வருகின்றன. வெள்ளரிப் பழங்களைவிட, காய்க்கே அதிக கிராக்கி உள்ளது.  
           இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியபோது 3 நாள்கள் மழை பெய்ததன் காரணமாக, வெள்ளரிச் செடிகள் தண்ணீரில் மூழ்கி அழுகி சேதம் அடைந்தன. அதன்பிறகு விவசாயிகள் மீண்டும் வெள்ளரி சாகுபடி செய்து, தற்போது வெள்ளரிக்காய் வெள்ளரிப்பழம் அறுவடை ஆகிக் கொண்டு இருக்கிறது. வெள்ளரிக்காய் சிறந்த நீரிளக்கி. தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பருமனைக் குறைக்கும். பசியைத் தூண்டும். ஈரல், கல்லீரல் சூட்டைத் தணிக்கும். பித்தத்தைத் தணிக்கும். தலைச் சுற்றலைத் தடுக்கும்.

              மூட்டுவலி வீக்கம், சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும். ரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிகரிக்கத் தேவையான ரசாயனப் பொருள் வெள்ளரிக்காயில் உள்ளது. புகைப்பிடிப்போருக்கு குடலில் படியும் நிகோடின் விஷத்தை நீக்கும்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior