உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 06, 2011

கடலூர் வெள்ளிக் கடற்கரைக்கு (சில்வர் பீச்) சுற்றுலா வந்த இளைஞர் கடலில் மூழ்கி சாவு

கடலூர்:

      கடலூர் சில்வர் பீச்சுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வந்த இளைஞர், கடலில் மூழ்கி இறந்தார்.
 
        பெங்களூர் நாராயணபுரத்தைச் சேர்ந்த சேகரின் மகன் பாரத் (23). பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.பாரத்தும் அவரது நண்பர்கள் சிலரும், தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களுக்குச் சுற்றுலா சென்றனர். ஞாயிற்றுக்கிழமை கடலூர் வந்த அவர்கள், தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் குளிக்கச் சென்றனர். கடலில் குளித்துக் கொண்டு இருந்தபோது பாரத், அலைகளில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். உடன் வந்தவர்கள் முயன்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. சிறிது நேரத்தில் பாரத் உடல் கரை ஒதுங்கியது. சடலத்தை தேவனாம்பட்டினம் போலீசார் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior