உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 23, 2011

சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கிள்ளை : 

          சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். சிதம்பரம் அடுத்த சி.முட்லூரில் உள்ள அரசு கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 

           கோடை விடுமுறைக்கு பின் கடந்த 15ம் தேதி கல்லூரி துவங்கியது. நேற்று முன்தினம் காலை கல்லூரிக்கு வந்த இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததையும், கல்வி உதவித் தொகையை வழங்காததை கண்டித்தும், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்தனர். இந்திய மாணவர் சங்க சிதம்பரம் நகர செயலாளர் கோபால் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்



.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior