உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 23, 2011

சிதம்பரம் பொன்னேரியில் பெயரளவுக்கே தூர்மண் அள்ளப்படும் அவலம்


பொக்லைன் மூலம் பெயரளவுக்கே தூர்மண் அள்ளப்படும் பொன்னேரி.

சிதம்பரம்:
 
           சிதம்பரம் அருகே பொன்னேரியில் பெயரளவுக்கே தூர்மண் எடுப்பதால் விவசாயிகள் மிகவும் ஏமாற்றமும், கவலையும் அடைந்துள்ளனர்.  

              அணைக்கரையிலிருந்து சிதம்பரத்தை அடுத்த சின்னகாரமேடு வரை கொள்ளிடத்தின் இடது கரை ரூ.108 கோடி செலவில் பலப்படுத்தி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கரையை பலப்படுத்த வீராணம் ஏரி மற்றும் பொன்னேரியிலிருந்து தூர்மண்ணை எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.  

            ஆனால் வீராணம் ஏரியிலிரும், பொன்னேரியிலும் பெயரளவுக்கு மண் அள்ளப்படுவதால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகியுள்ளனர். வீராணம் ஏரி, பொன்னேரியிலிருந்து மண் அள்ளுவதால் ஏரியும் தூர்வாரப்படும், கூடுதல் கொள்ளளவு நீர் தேக்கலாம் என அங்கிருந்து மண் அள்ளுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

             ஆனால் பெயரளவுக்கு அங்கு மண் அள்ளப்படுவதாலும், இதை காரணம் காட்டி குறுவை சாகுபடிக்கு இதுவரை தண்ணீர் திறந்துவிடப்படாததாலும் விவசாயிகள் கடும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.  ஒப்பந்தத்தின்படி பொன்னேரியிலிருந்து 7.012 லட்சம் கன மீட்டர் மண் அள்ள வேண்டும். ஆனால் இதுவரை 2 லட்சம் கனமீட்டர் மண்கூட அள்ளப்படவில்லை என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கனமழைக்காலங்களில் பொன்னேரியில் ஆண்டுதோறும் வெள்ளப் பெருக்கெடுத்து விவசாயப் பணி பாதிக்கப்படுகிறது.  

            இந்தாண்டாவது பொன்னேரி தூர்வாரப்பட்டு கூடுதல் நீர் தேக்கப்படுவதால் வெள்ளப் பெருக்கை தவிர்க்கலாம் என இருந்த விவசாயிகள் மத்தியில் சரியாக மண் அள்ளப்படாததால் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர் என கண்ணங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் கே.ராஜசேகரன் தெரிவித்தார்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior