உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 23, 2011

நெய்வேலி இளைஞரின் மனிதாபிமானம்

2 கால்களும் இல்லாத பெண்ணை காதலித்து மணந்த வாலிபர் : வடபழனி கோவிலில் பெற்றோர் முன்னிலையில் இன்று திருமணம்



 
பொன்னை விரும்பும் பூமியிலே...
என்னை விரும்பும் ஓருயிரே... 
புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே...

 
             என்று ஆலயமணி படத்தில் கால்களை இழந்த கதாநாயகி சரோஜாதேவியை தள்ளுவண்டியில் வைத்து தள்ளியபடி நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பாடுவார்.  

          அதேபோல 2 கால்களும் இல்லாத ஒரு பெண்ணை மோகன் என்ற வாலிபர் திருமணம் செய்து புரட்சி செய்து இருக்கிறார்.   வடபழனி முருகன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை ( 19.06.2011)  காலை நடந்த 50 ஜோடிகள் திருமணத்தில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது மோகன்- கற்பகம் திருமணம்தான்.

         பட்டுவேட்டி கட்டி கம்பீரமாக காட்சி அளித்த மணமகன் மோகன் தள்ளுவண்டியை தள்ளிக் கொண்டு வந்தார். அதில் 2 கால்களையும் இழந்த ஊனமுற்ற இளம்பெண் கற்பகம் மணக்கோலத்தில் அமர்ந்திருந்தார். பெற்றோர் முன்னிலையில் அவர்கள் மாலைமாற்றி திருமணம் செய்து கொண்டார்கள்.

ஊனமுற்ற பெண்ணை மணந்த மணமகன் மோகன் கூறியது:-  

            எனக்கு சொந்த ஊர் நெய்வேலி. எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக் டிப்ளமோ படித்து உள்ளேன். புரசைவாக்கத்தில் ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறேன். அந்த கடையில்தான் கற்பகமும் வேலை பார்க்கிறார். தினமும் தள்ளுவண்டியில் தாயார் கடைக்கு அழைத்து வருவார்.

           எனக்கு சிறுவயது முதலே ஊனமுற்ற பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. கற்பகத்தை பார்த்ததும் அந்த எண்ணம் மேலும் அதிகரித்தது.   கால்களை இழந்தபோது தன்னோடு பழகியவிதமும், நடந்து கொண்டவிதமும் என்னை கவர்ந்தது. அவரை உயிருக்கு உயிராக காதலிக்க தொடங்கினேன்.  எனது விருப்பத்தை பெற்றோர்களிடம் தெரிவித்தேன். எல்லோருடைய சம்மதத்துடன் கற்பகத்தை வாழ்க்கை துணையாக ஏற்று உள்ளேன். வெற்றிகரமாக எங்கள் வாழ்க்கை பயணத்தை நடத்துவோம்.  

மணமகள் கற்பகம் கூறியது:-

           எ  னக்கு 2 1/2 வயது இருக்கும்போது போலியோ தாக்கியதால் 2 கால்களும் செயல் இழந்து விட்டது. 10-ம் வகுப்பு வரை படித்தேன். எனது தந்தை சண்முகம் இறந்து விட்டார். அம்மா சண்முகசுந்தரிதான் ஊன்றுகோலாக இருந்து என்னை தினமும் தள்ளு வண்டியில் வைத்து பார்மசிக்கு அழைத்து செல்வார்.  எல்லோரையும் போல் எனக்கும் வாழ்வு கிடைக்குமா? அம்மாவுக்கு பிறகு யார் நமக்கு துணை இருப்பார்கள் என்று ஏங்கி கொண்டு இருந்தேன். எனது ஏக்கத்துக்கு நல்ல தீர்வு கிடைத்து உள்ளது. மோகன் கடவுள் போல் கணவராக கிடைத்து உள்ளார்.  இவ்வாறு அவர் கூறினார்.

          கற்பகத்தின் அக்காள் பிரேமா ஆரோக்கியமானவர். ஆனால் அவரது கணவர் வள்ளிநாயகம் ஊனமுற்றவர். கற்பகத்தின் தங்கை கவுரி எந்த குறையும் இல்லாதவர். அவரது கணவர் அய்யனார் ஊனமுற்றவர். 2 கால்களையும் இழந்த கற்பகத்துக்கு எந்த குறையும் இல்லாத மோகன் கணவராக கிடைக்கப்பெற்றுள்ளார். கற்பகத்துக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி. 
 

 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior