உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 05, 2011

திட்டக்குடி தாகம் தீர்த்த புரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/2b1da5ce-7b08-4c4a-9526-48e5b32c9fb4_S_secvpf.gif

 
திட்டக்குடி:

           திட்டக்குடியை அடுத்துள்ள இறையூரில் புகழ் பெற்ற தாகம் தீர்த்த புரீஸ்வரர் கோவில் உள்ளது. இறையூர் கிராமமக்கள் இந்த கோவிலை சீரமைத்துள்ளனர். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற 10-ந் தேதி காலை 9.30 மணி அளவில் நடக்கிறது. இதையொட்டி அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் அனுக்ஞை, விக்னேஸ்வரா பூஜையுடன் பூஜைகள் தொடங்கின.

              யாக சாலையில் சாமி, அம்மன், திருஞானசம்மந்ததிற்கு 15 பிரதான யாக குண் டங்களும், பரிவார தெய்வங்களுக்கு 10 யாக குண்டங்களும் அமைக்கப்பட்டுள் ளன. இவற்றை சுற்றி 274 கலசங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் தொடங்கின. முதல் கால பூஜை வரும் 7-ந் தேதி இரவும், மறுநாள் வெள்ளிக் கிழமை 2-ம் கால 3-ம் கால பூஜைகளும், 9-ந் தேதி 4-ம் கால 5-ம் கால பூஜைகளும் நடக்கின்றன, 10-ந் தேதி காலை 9.30 மணி அளவில் கும்பாபி ஷேகம் நடக்கிறது. 
 
            விழாவில் சமூக நலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம், புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி, பாராளுமன்ற உறுப்பினர் கே.எஸ். அழகிரி, திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் தமிழ் அழகன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior