உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 25, 2011

கடலூர் மாவட்டத்தில் வருமான வரி தாக்கல் செய்ய சிறப்பு முகாம்கள்

கடலூர் : 

     வருமான வரித்துறை படிவங்கள் தாக்கல் செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் 28ம் தேதி துவங்குகிறது.

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரி பிரதாப் சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                  வருமான வரித்துறை சார்பில் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை பொது மக்கள் வருமான வரி படிவங்களை தாக்கல் செய்வதற்கான சிறப்பு முகாம்  நெய்வேலி, சிதம்பரத்தில் நடக்கிறது. 

நெய்வேலி, வட்டம் 25, விருந்தினர் மாளிகையிலும், 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட் ஹால் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. 

             காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை செயல்படும் இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior