உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 15, 2011

மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை

கடலூர்:

              மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு அனைத்து வகை, மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமையாகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்தது.  

              கடலூர் சுத்துக்குளத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த இச்சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில், மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனு அளித்துக் காத்து இருக்கும் அனைவருக்கும் விரைந்து உதவித் தொகை வழங்க வேண்டும். ஊனத்தின் அளவைக் குறிப்பிட, ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர்கள் கையொப்பமிடும் அரசாணையை அமல்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகள் தொழில் தொடங்க, வங்கிகள் மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் உதயகுமார், துணைத் தலைவர் ராஜ்குமார், இணைச் செயலாளர் சிவபாலன் உள்ளிட்டோர் பேசினர். சங்கத்தின் புதிய தலைவராக ஆளவந்தார், செயலாளராக பி.முருகையன், பொருளாளராக வசந்தி உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior